வியாழன், 24 மே, 2012

this story was presented for the first time in an Arabic Islamic program, it brought tears to everyone who heard it... it is so touching, it's about true LOVE and true Jihad!! it's little bit long, so plz give few minutes of your time to read it, it really worth it, jazakallah khair

A Muslim sent his true love story by e-mail to an Islamic program, this is his story as it was told by the sheikh who presented that program: 
"I knew her since she was a 13 years old girl, she used to came to visit her father in jail. I was a 20 years old young man (I was in jail with her father because we used to make Dawah and invite people to Jihad). To me, she was just a little innocent girl. 
As the day passed, she became a young lady ready for marriage, and her father asked if I would marry her. In that time I didn’t say anything because I was behind bars.
After that, I was released from jail. I've never forgotten her father's suggestion. I talked to my mother about it. She refused; she wanted me to marry my cousin who, according to her, would make me forget the “dangerous” life I am living. I told her: "Mother, I want a wife who helps me and be with me in this path I've chosen: the path of Dawah and Jihad". She finally accepted. 
The next day, I went to the girl, looked deep into her eyes. She lowered her gaze shyly. I asked her: “will you accept to be my wife?” 
She replied: “My father accepted you already, so I accept too" 
I warned her:"The time I'll spend behind bars will be more than the time I'll spend with u"
"this is why I accepted to be your wife" she replied
I said: -"I'm Being Chased"
- "why?"
- " because I am following the right path"
- "so don't you ever leave that path"
- "they may execute me"
- "Why?"
- "because I say my Lord is Allah!"
- “Your way is mine, and you will precede me to heaven"
- “My mother doesn't love you" 
- “I will be patient" 
So I said:"I rely on Allah" 
Then we signed the marriage-contract (Akdul Nikah)
I told her:"I don't know any words of love!"
she said:"Your eyes say million of words to me" 
- "we still at the beginning of the road, it's not too late. My life is so hard".
- "we are in the middle of the road and I love your life"
- "We will face many hardships" I said
- "Who else can face them with you other than me?!!"She replied
Then we got married. After few months, she got pregnant. We were so happy! One day, they came to take me to jail. I saw tears in her eyes… I said" I told you this will happen!"
She said: "I feel that your chains are around my neck! Stay on the right path and be strong". 
They put me in a jail far from home. She came to visit me in prison every day. Between visits, she used to come and try to see me even from a distance.
I told her once:"You're pregnant, you must take some rest!"
"I find my rest when I am with you" She replied.
She visited me one day and told me that she lost our baby. I told her that it was the will of Allah. After a period of time, I was released from jail. As day passed, we couldn't have other children, she knew that she will never be a mother in her life.
"Remarry" she said to me once. I didn't reply, she repeated "marry a second wife!"
I replied: "and who told you I didn't!" 
She was shocked, and she asked me in a hoarse voice:"Since when have you’ve been married?!"
"Before our marriage and I have a lot of children" I replied
"Are you joking!" she asked. I replied "I swear to Allah I married "Dawah", all its children are mine"
She said:"Then I will raise them with you"
One day, I came to her and told her: “My beloved I got a job contract, we will travel to other country and leave anxiety and fear behind.”
She looked at me and said: "I didn't follow you for that!"
I asked : "Then for what?" 
She replied:" For Jihad, trials and patience"
I felt that my love for her increased
After that, they came and took me to prison once again. I said:"this time, I may stay in jail for longer time, so I will divorce you"
"No don't! I wish I was in your place" she replied
Every time she visited me, I noticed she became more and more thin and pale. When I asked her about it she said it was because of her concern about me. She had a fatal disease. She didn't tell me and she didn't stop visiting me. 
I really hated the chains which was depriving me from touching her hand! I told her once: "Uncover your face, I want to see it" 
she replied: "I can't, people are looking to us" 
but she was hiding the truth…
One day, she came to me in an unusual visit time. The jail guardian was so kind with me, as if he was hiding something from me. They took off the chains from my hands
"Finally they took off my chains, finally I can touch your hand and see you face… But,your face changed, it has no features!" I felt so much pain, I asked :"what's wrong?" 
she replied:"You have the right to know, I have no much time left in this Dunya. Are you pleased with me?" Then she told me the truth. I felt rage, I cried and asked : "Why am I the last person to know this?" She replied:"Why would I put you in such pain by telling you? I came here today to ask you for your satisfaction, I don't know if I will see you again"
She took my hand and said: "You can make it, you are a strong man! may Allah grant you a better wife "
I couldn't say a word, I couldn't see! I was swallowing my hot tears… then she disappeared. At the same day, I heard she was gone. Her weak body couldn’t stand the long and hard trip to jail.
This time the trial was really harsh! They let me attend her funeral in which I hardly moved, I walked as an old man. Her brother put a letter from her in my hand. In her letter, she advised me to be patient and she gave me a list of names of potential wives whom she had chosen for me. I ripped the letter and then I went back to my cell.... 

END OF STORY 

This is how sacrifice for the sake of Allah should be..

வெள்ளி, 23 டிசம்பர், 2011

பெண்களுக்கும் பங்குண்டு



 



இஸ்லாமிய வரலாற்றை புரட்டிப் பார்க்கும்போது பெண்மணிகளின் பங்களிப்பு பாரிய அளவில் இருந்திருக்கிறது. ஒரு தாயாக, மனைவியாக, சகோதரியாக, மகளாக முஸ்லிம் பெண் சமூகத்தை தாங்கி நிற்கிறாள். ஆண்களில் சிலர் தாம் மட்டும் புகழுக்குரியவர்கள் என நினைக்கின்றனர். தாமே போராட்டங்களின் முன்னோடிகள் எனவும், நாகரிகங்களின் சொந்தக்காரர்கள் எனவும் கருதுகின்றனர். அறிவும், பலமும், பதவியும் அவர்களிடம் மாத்திரமே இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். பெண்களைப் பற்றி கூறப்பட்டால், அவர்களால் வேலைகளை திறன்பட செய்ய முடியாது, வீட்டு வேலைகளை செய்வதும் கணவனுக்கு பணிவிடை செய்வதும் தான் அவர்களது பணி என்று கூறுகின்றனர்.
உண்மையில் பெண்களுக்கு அல்லாஹ் நிறைய அருள்களை வழங்கியிருக்கின்றான். இஸ்லாமிய வரலாற்றை திரும்பிப் பார்க்கும்போது பெண் என்பவள் எவ்வாறு காணப்பட்டாள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஜாஹிலிய்யா காலத்தைப் பற்றி விளங்கிக் கொள்ளும்போதுதான் இஸ்லாம் பெண்களுக்கு எவ்வளவு சுதந்திரம் வழங்கியிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும். ஜாஹிலியா காலத்தில் பெண் இழிவுப் பொருளாக கருதப்பட்டாள். ஓர் ஆணின் உடலியல் தேவைகளை நிறைவேற்றும் அடிமைதான் பெண் என அக்கால மக்கள் நம்பியிருந்தனர்.
பெண் சமூகத்தின் அங்கமாகவே பார்க்கப்படவில்லை. பெண் குழந்தைகள் உயிருடன் புதைக்கப்பட்டன. அவர்களது மனோநிலை பற்றி திருமறை கூறும்போது "அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்து விட்டது என்று நன்மாராயம் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து கோபமுடையவனாகிறான்" (நஹ்ல்: 58) என்று வர்ணிக்கிறது. இந்த அநியாயங்கள், கொடுமைகளிலிருந்து பெண்ணுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தது இஸ்லாம். கண்ணியம் வாங்கிக் கொடுத்தது இஸ்லாம். ஆணைப் போலவே சகல உரிமைகளையும் பெற்றுக் கொடுத்தது இஸ்லாம், "ஆணாயினும் பெண்ணாயினும் யார் நற்செயல்கள் புரிகின்றார்களோ அவர்களுக்கு மணமான நல்ல வாழ்க்கையைக் கொடுப்போம்" (நஹ்ல்: 97) என்று அல்குர்ஆன் கூறுகின்றது.
பெண்ணுக்குரிய சகல உரிமைகளையும் வென்றுகொடுத்த மார்க்கம் இஸ்லாம். (நிஸா - பெண்கள்) என்ற பெயரில் ஒரு முழு ஸூறாவையே அல்லாஹ் இறக்கி வைத்துள்ளான். "மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் யாவரையும் ஓர் ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்து அவரது மனைவியைப் படைத்தான். பின்னர் அவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் படைத்தான் (அந்நிஸா-01) ஒரு பெண் பிள்ளையைப் பராமரிப்பதிலும், பாதுகாப்பதிலும் இஸ்லாம் கூடிய அக்கறை செலுத்துகிறது.
இஸ்லாமிய சமூகத்தை கட்டியெழுப்புவதில் ஆணுக்குள்ள அதே பங்கு பெண்ணுக்குமுண்டு. நபி (ஸல்)  அவர்கள் காலம் முதல் இன்று வரை இஸ்லாத்தைப் பாதுகாப்பதில் பெண்களின் பங்கு அளப்பரியது. கல்வி, பொருளாதார, போராட்ட விடயங்களில் பங்கு கொண்டு இஸ்லாத்தை வளர்க்க முடிவு செய்து கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஆண்களைப் போலவே பெண்களும் வணிகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இஸ்லாமிய தஃவாவை பாதுகாத்த பெருமை ஆண்களைப் போலவே பெண்களையும் சாரும். குடும்ப வாழ்வில் பெண்ணுக்கு விஷேடமான பங்கிருக்கிறது. குடும்ப வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தி பெண்ணுக்கிருக்கிறது.
நபி (ஸல்) அவர்களின் தஃவாவை ஆரம்பமாக ஏற்றுக் கொண்டவர்களுள் அவரது மனைவி கதீஜா (றழி) அவர்களும் ஒரு வராவார். அப்பெண்மணி தனது செல்வம் முழுவதையும் இஸ்லாத்திற்காக தியாகம் செய்தார். நபியவர்களின் தஃவாவுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கினார். இஸ்லாத்திற்காக நிறைய தியாகங்கள் செய்தார். பல இழப்புகளை சந்தித்தார். இதனால்தான் நபியவர்களின் ஒரு ஹதீஸ் "சுவனப் பெண்களில் சிறந்தவர்கள் கதீஜா பின்த் ஹுவைலித், பாதிமா பின்த் முஹம்மத், ஆஸியா (பிர்அவ்னின் மனைவி), மர்யம் பின்த் இம்ரான்" என்று குறிப்பிடுகின்றது.
தியாகம், போராட்டம் என்று நோக்கும்போது கூட அதிலும் பெண்ணுக்கு பெரிய பங்கிருக்கிறது. இஸ்லாத்தை பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தபோது அதை ஏற்றுக் கொண்டதற்காக அம்மாரின் தாய் ஸுமையா பின்த் ஹம்மார் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். போராட்டங்களின்போது முஸ்லிம் படையணிக்கு உதவியாக முஸ்லிம் பெண்மணிகள் செயற்பட்டடிருக்கிறார்கள். நபியவர்களின் காலத்தில் இஸ்லாத்திற்காக வீரத்துடன் செயற்பட்டவராக ஹவ்லா பின்த் அஸ்வர் (றழி) அவர்கள் காணப்படுகின்றார்கள். யுத்தத்தில் காயப்பட்ட முஸ்லிம் வீரர்களுக்கு மருந்து உதவிகளை முஸ்லிம் பெண்களே செய்துவந்தனர்.
நவீன காலத்தில் முஸ்லிம் பெண்களை நோக்கும்போது இரண்டு வகையினரை காண முடியும். இஸ்லாமிய உணர்வுடன் வாழ்பவர்கள் ஒரு பகுதியினர். மேற்கத்தேய கலாச்சாரத்தில் மூழ்கி இஸ்லாமிய பெயர்களில் மாத்திரம் வாழ்பவர்கள் இன்னொரு வகையினர். சிறந்த இஸ்லாமிய குடும்பத்தை உருவாக்கியெடுப்பதில் முக்கிய பொறுப்பு ஒரு குடும்பப் பெண்ணின் கையில்தான் இருக்கிறது. அரை நூற்றாண்டுக்கு மேலான பலஸ்தீனப் போராட்டத்தில் பெண்களின் தியாகம் பாராட்டப்பட வேண்டிய தாகவுள்ளது. அவர்கள் தமது கணவனையும், பிள்ளைகளையும் உற்சாகமூட்டி போராட்டத்துக்கு அனுப்பி வைப்பதைப் பார்த்து எந்த உள்ளமும் அழாமல் இருக்க முடியாது.
கல்வித் துறையிலும் முஸ்லிம் பெண்மணிகள் சாதனை புரிந்திருக்கிறார்கள். பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாக, விரிவுரையாளர்களாக செயற்படுகின்றார்கள். மருத்துவர்களாக, பொறியியலாளர்களாக, வழக்கறிஞர்களாக, கணக்காளர்களாக, ஆசிரியைகளாக தமது சேவையை சமூகத்திற்கு வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். எமது பெண்கள் பல துறைகளையும் சார்ந்த புத்த ங்கள் எழுதியிருக்கிறார்கள். ஊடகவியலாளர்களாக முஸ்லிம் பெண்கள் செயற்பட்டு வருகிறார்கள்.
அரசியலிலும் நவீன கால முஸ்லிம் பெண்கள் ஈடுபடுகின்றார்கள். அரச நிறுவனங்களிலும் முக்கிய பதவிகளில் முஸ்லிம் பெண்கள் இணைந்திருக்கிறார்கள். பல நாடுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களாக எமது பெண்கள் இருக்கின்றார்கள். அமைச்சுப் பதவிகளைக் கூட பொறுப்பேற்றிருக்கிறார்கள். பாராளுமன்றத்தில் பெண்கள் உரிமைகள் சம்பந்தமாகப் பேசுகின்றார்கள். பெண்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கின்றானர். முக்கியமான நிறுவனங்கள், கம்பனிகளின் உரிமையாளர்களாகவும் எமது பெண்கள் இருப்பது முஸ்லிம் பெண்களின் அந்தஸ்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கான சில உதாரணங்களாகும்.
உண்மையில் இஸ்லாத்தில் பெண்ணுக்கு மிக உயரிய இடம் உண்டு. அவளை மிகவும் கண்ணியத்துடனேயே இஸ்லாம் நோக்குகிறது. இஸ்லாமிய வரலாற்றை புரட்டிப் பார்த்தால் முஸ்லிம் பெண்களின் சாதனைகளைப் புரிந்து கொள்ளலாம். முஸ்லிம் பெண்களையும் இணைத்துத்தான் இஸ்லாமியக் குடும்பம், இஸ்லாமிய சூழல், இஸ்லாமிய நாடு அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை அனைவரும் ஆழமாகப் புரிய வேண்டும். அவளுக்குரிய உரிமைகள் முழுமையாக வழங்கப்பட வேண்டும். உலகில் மிகப் பெரும் இயக்கமாக வளர்ந்துள்ள இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை வளர்த்த பெருமை ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்குமுண்டு.
கலாநிதி அலி-அல்-ஹம்மாதி அவர்களது கட்டுரையை தழுவி எழுதப்பட்டது.

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

நோன்பு கடமையானவர்கள் .....!

ரமழான் மாத நோன்பு அம்மாதப் பிறை கண்டதும்,அல்லது ஷபான் மாதம் முப்பதாவது நாள் முடிவின் இரவில் நோற்பது வாஜிபு.

நோன்பு கடமையாவதற்கு நான்கு ஷர்த்துக்கள் உண்டு.

1 .இஸ்லாம் - முஸ்லிமாய் இருத்தல்.
2 .அல் புலூக் - பிராய மெத்தியிருத்தல்.
3 .அல் அக்ல் - புத்தி சுவாதீனமுள்ளவராயிருத்தல்.
4 .அல் குத்றத் - சக்தியுள்ளவராயிருத்தல்.`

சிறுவர்,சிறுமியர்கள் (புத்திதெரிந்து ) பத்து வயதை எத்தியதும் பெற்றோர் அவர்களை நோன்பு நோற்குமாறு ஏவ வேண்டும்.மாதவிடாய்க்காரிகள்,பெரும்பாட்டுக்காரிகள்
நோன்பு நோற்பது கூடாது.ஆனால் பிறகு களாச் செய்ய வேண்டும்.இவர்கள் நோன்பு காலங்களில் குர் ஆனைத் தவிர மற்ற எல்லா ஓதல்களையும் ஓதலாம்;ஸலவாத்து,திக்ர்,தஸ்பீஹ் செய்யலாம்.இவர்கள் நோன்பு நோற்காத நாட்களுக்கு ஒவ்வொரு "முத்து"கொடுக்க வேண்டியதில்லை.

நோன்பை விடுவதற்கு ஆகுமானவர்கள்:

1 . வயோதிபர்
2 . நோயாளி
3 . கடுமையான தாகம் அல்லது பசி
4 .வேலையில் பராக்காய்  இருப்பது.(அதனால் நோன்பு நோற்பது கொண்டு தங்க முடியாத கஷ்டம் உண்டாகுதல்).
5 .பால் கொடுக்கும் தாய்மார்.(நோன்பு நோற்பதனால் கடுமையான கஷ்டம் உண்டானால் மட்டும்.)
6 .வீட்டு மிருகங்களிலொன்றின் உயிரைக் காப்பாற்றுவதற்காக
7 .பிரயாணம்

இத்தகையோர் தாம் விட்ட நோன்புகளை மீட்கவும் ஒவ்வொரு 'முத்து'கொடுக்கவும் வேண்டும்.பிரயாணிகள் மூன்று காரணங்களுக்காக மட்டுமே நோன்பை விடலாம்.

1 . பிரயாணம் குறுகியதாக இருக்க வேண்டும்.(ஆகுமான அல்லது ஆகாத பிரயாணமாக       இருந்தாலும் சரியே)
2 .பிரயாணம் நோன்பை விட முந்தியதாய் இருக்க வேண்டும்.
3 .விட்ட நோன்பைக் களாச் செய்வது முடியுமானவர்களாயிருத்தல்.
எனவே,நீண்ட பிரயாணிக்கு நோன்பை விடுவது ஆகாது.இவரும் பிறகு களாச் செய்ய நாடினால் விடுவது ஆகும். 

திங்கள், 27 ஜூன், 2011

திருக்குர்ஆனின் மிக மகத்தான வசனம் என்று வர்ணிக்கப்பட்ட "ஆயத்துல் குர்ஸி' என்ற பின்வரும் வசனமும் இக்கருத்தை உறுதிப்படுத்துகிறது.

திருக்குர்ஆனின் மிக மகத்தான வசனம் என்று வர்ணிக்கப்பட்ட "ஆயத்துல் குர்ஸி' என்ற பின்வரும் வசனமும் இக்கருத்தை உறுதிப்படுத்துகிறது.

by Kalaimahel Hidaya Risvi on Sunday, June 26, 2011 at 8:07am
ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلۡحَىُّ ٱلۡقَيُّومُ‌ۚ لَا تَأۡخُذُهُ ۥ سِنَةٌ۬ وَلَا نَوۡمٌ۬‌ۚ لَّهُ ۥ مَا فِى ٱلسَّمَـٰوَٲتِ وَمَا فِى ٱلۡأَرۡضِ‌ۗ مَن ذَا ٱلَّذِى يَشۡفَعُ عِندَهُ ۥۤ إِلَّا بِإِذۡنِهِۦ‌ۚ يَعۡلَمُ مَا بَيۡنَ أَيۡدِيهِمۡ وَمَا خَلۡفَهُمۡ‌ۖ وَلَا يُحِيطُونَ بِشَىۡءٍ۬ مِّنۡ عِلۡمِهِۦۤ إِلَّا بِمَا شَآءَ‌ۚ وَسِعَ كُرۡسِيُّهُ ٱلسَّمَـٰوَٲتِ وَٱلۡأَرۡضَ‌ۖ وَلَا يَـُٔودُهُ ۥ حِفۡظُهُمَا‌ۚ وَهُوَ ٱلۡعَلِىُّ ٱلۡعَظِيمُ

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;, அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்காது, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.....

வெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை!

بسم الله الرحمن الرحيم
سر النجاح
ومفتاح الخير والبركة والفلاح
ஒரு  வாலிபன் ஒரு பெண்னை  திருமணம் செய்வதற்காக வேண்டி இஸ்திஹாரா தொழுகையை தொழுகின்றான்;  பின்னர் திருமணத்துக்காக    தயாராகின்றான்;  அப்போது     அவனது சகோதரன்  அப்பெண்னை  திருமணம்  முடிப்பதை விட்டும் அவனைத் தடுக்கின்றான். வேறு குடும்பத்தில் பெண் பார்க்க வேண்டுகிறான்.  அந்த வாலிபனோ, தான் பார்த்த பெண்னை மணம் முடிப்பதற்காக தனது சகோதரனை  கவரும் வகையில் பல முயற்சிகளை மேற்கொள்கிறான்;  ஆனால் அனைத்து முயற்சிகளும்  பயனளிக்கவில்லை.  இறுதியில்  வேறொரு பெண்னை மணக்கின்றான்.  குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பின்னர் அவ்வாலிபனுக்கு முதலாவது திருமணம்  பேசப்பட்ட அப்பெண் மரணிக்கின்றாள். தற்போது அவனுக்கு தான் தொழுத அந்த இஸ்திஹாரா தொழுகையில் முழுமையான திருப்தி ஏற்பட்டதோடு தன்னை தடுத்த தனது சகோதரனின் விருப்பமின்மை அவனுக்கு நல்லதாக அமைந்தது.

ஒரு வாலிபன் தொழிற்சாலை ஒன்றில் காலை மாலை என இரண்டு நேரங்களிலும் வேலை பார்த்து வந்தான்;  ஆனால் அவனது சம்பளமோ தனது அடிப்படைத் தேவையைக்கூட நிறைவேற்ற  போதாது; அல்லாஹ் அவனுக்கு நேரான வழியைக் காட்டினான்;  அல்- குர்ஆன் மனனப்பிரிவில் சேர்ந்தான்;  அத்தோடு பள்ளியில் நடக்கக்கூடிய மார்க்க வகுப்புக்களிலும், மார்க்க சொற்பொழிவுகளிலும் தவறாமல் கலந்து கொள்பவனாக இருந்தான். என்றாலும் அவனது தொழிலோ அதற்குத் தடையாகவே இருந்து வந்தது. இதனால், தான் மனைவி மக்களுடன் வீட்டில் இருப்பதற்கும் வீட்டின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும்  மிக மிக குறைவாகவே  அவனுக்கு நேரம் கிடைத்தது.

ஒரு நாள் அறிஞர் ஒருவரிடம் சென்று, தனது கஷ்டத்தை, முறைப்பாட்டை முன் வைக்கின்றான்.  அவர் சில அறிவுரைகளைக் கூறினார். அன்றிலிருந்து அந்த வேலையை வெறுத்தவனாக  தான் அல்-குர்ஆனையும் கற்று, மார்க்க வகுப்புக்களிலும் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு வேறொரு வேலையை தேடுகிறான். ஆனாலும் எங்கு தான் செல்ல? பின்னர் மார்க்க அறிஞர் அவனை பார்த்து,  நன்மையை, தனது தேவையை வேண்டி தொழும்  தொழுகையைப் பற்றி (இஸ்திகாரா தொழுகை) தெரியுமா? என்று கேட்க, அவன் தெரியாது என்று கூறினான். பின்னர் அதனை கற்றுக் கொடுத்தார். அவன் உடனே இஸ்திகாரா தொழுகையைத் தொழுதுவிட்டு இறைவன் பால் நம்பிக்கை வைத்தவனாக பிரார்திக்கின்றான். பின்னர் முயற்ச்சி செய்து ஒரு வேலையை பெற்றுக் கொள்கின்றான்.

சிறிது காலத்துக்குப் பிறகு மார்க்க அறிஞரிடம் மகிழ்ச்சியுடன் சநதோஷமான நிலையில்  சென்று கூறினான். அல்லாஹ் எனது கஷ்டத்தை நீக்கினான்;  குறைந்த நேரத்தில் அதிக சம்பளத்தை பெறக்கூடிய ஒரு தொழிலைப் பெற்றுக் கொண்டேன்; இதன் மூலம் மார்க்க வகுப்புக்களிலும், தனது மனைவி மக்களுடனும்  இருப்பதற்கு மிக மிக வசதியாக இருப்பதாக கூறினான்.                  
இதனது இரகசியம் தான் என்ன? இவர்களது வெற்றிக்கு காரணமாக அமைந்தது எது? இதுதான் இஸ்திகாரா தொழுகையின் இரகசியம்!

 இஸ்திகாரா தொழுகையின் முக்கியத்துவமும் சிறப்பும்!

மனிதனுக்கு எவ்வளவு தான் அறிவு ஞானம் கொடுக்கப்பட்டிருந்தாலும் பல திறமைகள் இருந்தலும், தன்னைப் படைத்த இறைவன் பால் ஒவ்வொரு நொடியிலும் அவனுக்குத் தேவைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. ஒரு மனிதன் குறித்த வேலையை செய்வதற்கு பல திட்டங்களை  இட்டு எந்த முறையான வழிகளை அதற்கு கையால வேண்டுமோ அனைத்தையும் கையாண்டு  செய்வதற்கு முற்படலாம். இறுதியில் அவைகள் அனைத்தும் பிரயோஜனம் அற்றவைகளாக மாறுகின்றன.
ஒரு மனிதனிடம் இரண்டு விஷயங்களுக்கு மத்தியில் தடுமாற்றம் ஏற்படலாம்! எதனை செய்தால் தனது குறிக்கோளை அடைய முடியும்? என்பதில் முடிவை காண முடியாதவனாக இருப்பான்!  சில வேலை அச்செயல் அவனை தான் விரும்பாத முடிவுக்கு கொண்டு சேர்க்கும்; அல்லது அது அவனை அழித்து விடும்! இவ்வாறான நிலைமைகளில் அவன் தடுமாற்றமுள்ளவனாக இருப்பான்.
இவ்வாறாண நிலைமைகளில் ஜாஹிலியா கால அரேபியர்கள் இவற்றிலிருந்து விடுபடுவதற்காக சில வழிமுறைகளைக் கையாண்டார்கள்.  அதுதான் அம்பெய்து குறி பார்ப்பதாகும்! அவர்களிடம் மூன்று சீட்டுகள் இருக்கும்; அவற்றில் ஒன்றில் “செய்” என்றும் மற்றதில் “செய்யாதே” என்றும் மற்றொன்றில்  “ஒன்றும் இருக்காது”! இவற்றில் “செய்”என்ற சீட்டு விழுந்தால் குறித்த அக்காரியத்தைச் செய்வார்கள். “செய்யாதே” என்ற சீட்டு விழுந்தால் அதனைச் செய்ய மாட்டார்கள்.
“ஒன்றும் இல்லாத” சீட்டு விழுந்தால் ஏதோ ஒன்று விழும் வரை தொடர்ந்து  சீட்டுகளை போட்டுக்கொன்டே இருப்பார்கள். இவ்வாறான நிலைமைகளில் இருந்து அல்லாஹ் முஃமின்களை பாதுகாத்தான். அதனை அவர்களுக்கு தடை செய்தான்.
قال تعالى (وأن تستقسموا بالأزلام ذلكم فسق….) سورة المائدة :03
அல்லாஹ் கூறுகிறான்:
“நீங்கள் அம்பெறிந்து குறிபார்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளன. இவை பாவமாகும்” (அல்குர்-ஆன் 5:3)
இதற்கு பகரமாக, நன்மையை நாடி தொழும் தொழுகையை (ஸலாத்துல் இஸ்திகாரா) நபி (ஸல்)அவர்கள் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். இதில் இருக்கக்கூடிய பிரார்தனை, “அல்லாஹ்வின்   மீது நம்பிக்கை வைத்தல், உதவி தேடுதல் அனைத்து சக்திகளை விட்டும் ஏக இறைவனது சக்தியை மாத்திரம் எதிர்பார்த்தல் முழுமையாக அவனது செயல்கள் வர்னனைகளை ஒருமைப்படுத்தல் அல்லாஹ்வையே பொறுப்பு சாட்டுவது போன்ற முக்கியமான கருத்துக்களை உள்ளடக்கிய பிரார்த்தனையாகும்.”
அல்லாஹ் மனிதனிடத்தில் கொண்ட கருனையால் தனது அடியானுக்கு (இஸ்திகாரா தொழுகையை) செய்யும்படி சொல்கின்றான். இச்செயலை செய்வதற்கு படைத்த இறைவனுக்கு முன்னால் ஒரு சில நிமிடங்களை மாத்திரமே செலவு செய்ய வேண்டும. இக்காரியத்தைச் செய்கின்றவர்கள் மிக மிக அரிதே! இத்தொழுகையின் மூலம் தான் நாடியதை தனது இறைவனிடம் கேட்பான்! அது மிகச் சிறிய விஷயமாக இருந்தாலும் அல்லது மிகப் பெரிய விஷயமாக இருந்தாலும் சரியே!
இத்தொழுகையின் மூலமும், பிரார்த்தனையின் மூலமும் ஒரு அடியான்  சிறிய விஷயமொன்றை நாடலாம்! ஆனால் காலப் போக்கில் அப்பிரார்தனையின் மூலம் அந்த விஷயம் பெரிய நன்மையைத் தரக்கூடியதாக மாறலாம்! இதனால் அனைத்து நன்மையான சந்தர்பங்களிலும் இத்தொழுகையைத் தவறவிடக் கூடாது. இதனது முக்கியத்துவத்தை நபி (ஸல்) அவர்கள் எமக்கு காட்டித் தந்தார்கள்! அவர்கள் தனது தோழர்களுக்கு அல்-குர்ஆனில் ஒரு சூராவை கற்று கொடுப்பதை போன்று இத்தொழுகையைக் கற்று கொடுத்தார்கள்.
ஜாபிர் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள்:
“நபி (ஸல்) அவர்கள் அல்-குர்ஆனில் ஒரு சூராவை கற்றுத் தருவதை போன்று இஸ்திகாரா தொழுகயைக் கற்றுதருபவராக இருந்தார்கள்”
இஸ்திகாரா  தொழுகையின் சிறப்பையும் முக்கியத்துவத்தையுமே இந்த நபிமொழி உறுதிப்படுத்துகின்றது.
இஸ்திகாரா  தொழுகையை தொழும் முறை:
பர்ளு தொழுகை அல்லாத இரண்டு ரக்அத்துக்களை இஸ்திகாரா தொழுகை என்ற என்னத்தோடு  தொழ வேண்டும். அதில் சூரா பாதிஹாவையும் அதன் பின்னால் அல்குர்-ஆனில் சில வசனங்களையும் ஓத வேண்டும். சுஜூதில் அல்லது அத்தஹியாத்தில் அல்லது ஸலாம் கொடுத்ததற்கு பிறகு  இஸ்திகாரா நபிமொழியில் வரக்கூடிய பிரார்த்தனையை, துஆவை பொருள் விளங்கி ஓதவேண்டும். தொழுகைக்கு பிறகு பிரார்த்திப்பதே மிக சரியான முறையாகும்.
இஸ்திகாரா தொழுகையைப் பற்றி வரக்கூடிய நபிமொழியும் பிரார்தனையும்:
     عن جابر رضي الله عنهما قال:كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا الاستخارة في الأمور كلها كما يعلمنا السورة من القرآن،يقول:إذا هم أحدكم بالأمر فليركع ركعتين من غير الفريضة  ثم  ليقل : اللهم إني أستخيرك  بعلمك، وأستقدرك بقدرتك، وأسألك  من فضلك العظيم،فانك تقدر ولا أقدر،وتعلم ولا أعلم،وأنت علام الغيوب،اللهم إن كنت تعلم أن هذا الأمر- ويسمي حاجته-خير لي في ديني ومعاشي وعاقبة أمري-أو
قال عاجل أمري وآجله-فاقدره لي ويسره لي،ثم بارك لي فيه،وان كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري- أو قال:عاجله وآجله-فاصرفه عني واصرفني عنه،واقدر لي الخير حيث كان ثم أرضني به.   (أخرجه البخاري. )
“அல்லாஹூம்ம இன்னீ அஸ்தகீருக பி இல்மிக, வ அஸ்தக்திருக பீகுதுரதிக, வஅஸ் அலுக மின் பழுலிகல் அழீம், பஇன்னக தக்திர் வலா அக்திர், வதஃலம் வலா அஃலம், வ அன்த அல்லாமுல் குயூப், அல்லாஹூம்ம இன் குன்த தஃலம் அன்ன ஹாதல் அம்ர – (தேவையைக் குறிப்பிட வேண்டும்) -கைருன் லீ பீ தீனீ வமஆஷீ வஆகிபது அம்ரீ பக்துர்கு லீ வயஸ்ஸிர்கு லீ சும்ம பாரிக்லீபீ, வ இன்குன்த தஃலம் அன்ன ஹாதல் அம்ர ஷர்ருன் லீ பீதீனீ  வமாஆஷீ  வ ஆகிபது அமரீ பஸ்ரிப்கு அன்னீ வஸ்ரிப்னீ அன்கூ  வக்துர்லியல் கைர ஹைசு கான சும்ம அர்லினீ பீஹ்”
இதன் பொருள்:
“யா அல்லாஹ்! நான் உன்னிடம் உனது ஞானத்தைக் கொண்டு நன்மையை யாசிக்கின்றேன்; மேலும் உனது ஆற்றலைக் கொண்டு ஆற்றலை யாசிக்கிறேன்; மேலும் உன்னிடமிருந்து உனது மகத்தான அருளை யாசிக்கிறேன்; ஏனெனில் நீ ஆற்றல் பெற்றவன்; என்னிடம் எந்த ஆற்றலும் இல்லை. மேலும் நீ நன்கு அறிபவன். நான் எதனையும் அறியமாட்டேன். மேலும் நீயே மறைவானவை அனைத்தும் அறிந்தவன்! யாஅல்லாஹ்! இந்த விஷயம் (விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்) எனக்கும், எனது தீனுக்கும், எனது வாழ்கைக்கும், எனது விவகாரத்தின் முடிவுக்கும்-இவ்வாறும் சேர்த்துக் கொள்ளலாம். எனது உடனடியான, தாமதமான விவகாராத்திற்கும் – நன்மையானது என நீ அறிந்தால் இதனை எனது விதியில் சேர்ப்பாயாக! மேலும் இதனை எனக்கு எளிமையாக்கித் தருவாயாக! பிறகு இதில் எனக்கு பாக்கியம் அருள்வாயாக! ஆனால் இந்தப் பணி எனக்கு, எனது தீனுக்கும் எனது வாழ்கைக்கும் எனது விவகாரத்திம் முடிவுக்கும் – இவ்வாறு சேர்த்துக் கொள்ளலாம். எனது உடனடியான், தாமதமான விவகாரத்துக்கும்) தீமையானது என நீ அறிந்தால் இதனை என்னை விட்டு அகற்றி விடுவாயாக! மேலும் எனது விதியில் நன்மையை சேர்ப்பாயாக! அது எங்கிருந்தாலும் சரியே! பிறகு அதில் எனக்கு திருப்தி ஏற்படுத்தித் தருவாயாக!” (ஆதாரம் புகாரி)
இஸ்திகாரா தொழுகையை தொழும் நேரம்:
இஸ்திகாரா தொழுகைக்கு என்று குறிப்பிட்ட நேரங்கள் கிடையாது. எனினும் தொழுவதற்கு தடுக்கப்பட்ட நேரங்களை தவிர்ந்து கொள்வது நல்லதே! பஜுர் தொழுகையிலிருந்து சூரியன் ஒரு ஈட்டி உயரும் வரை உள்ள நேரம்,  மற்றும் அஸருடைய நேரம் முடிந்ததிலிருந்து சூரியன் மரையும் வரை உள்ள நேரங்களையும் குறிப்பிடலாம். இவ்வாறான நேரங்களில் நபிலான தொழுகைகள் தடுக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு காரணத்துக்காக தொழும் தொழுகையை தொழலாம்.  உதாரணமாக பள்ளியுடைய கானிக்கை தொழுகை (தஹீயதுல் மஸ்ஜித்) மேலும் பிரார்த்தனைகள் ஏற்று கொள்ளப்படும் நேரங்களில் தொழுவது வரவேற்கத்தக்க விஷயமாகும். உதாரணமாக இரவின் கடைசி பகுதி, பாங்குக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட நேரம், இஸ்திகாரா தொழுகை தொழ தடுக்கப்பட்ட நேரத்தை விட்டும் பிந்திவிடுமானால் அந்நேரத்தில் தொழலாம்.
தவறான நம்பிக்கை:
இஸ்திகாரா தொழுகையை இரவில் தூங்குவதற்கு முன் தொழுதுவிட்டு தூங்கினால் அத்தூக்கத்தில் ஒரு கணவு காண்பார்; அக்கணவே சரியானது என்று சில மனிதர்கள் தவறாக இதனை புரிந்திருக்கின்றார்கள். இது முற்றுமுழுதாக  பிழையான கருத்தும் நபிமொழிக்கு மாற்றமான  முறையும் ஆகும். மேற்குறிப்பிட்டது போல் இத்தொழுகைகென்று குறிப்பிட்ட நேரம் இல்லை. அத்தோடு இஸ்திகாரா தொழுபவர் கணவு காண்பது நிபந்தனையும் அல்ல! ஆகையால் எப்பொழுது ஒரு மனிதனுக் தேவை வருகின்றதோ அப்பொழுது அவன் தொழுவான். பின்னர் அல்லாஹ்வின் மீது பூரண நம்பிக்கை வைப்பான்.
இஸ்திகாரா தொழுவதற்கு அனுமதிக்கப்பட்ட விஷயங்கள்:
அனைத்து விஷயங்களுக்காகவும் தொழலாம்! அது மிகச் சிறிய விஷயமாக இருந்தாலும் அல்லது மிக பெரிய விஷயமாக இருந்தாலும் சரியே! எத்தனை மனிதர்களது சிறிய விஷயங்கள் மிக பெரிய விஷயங்களாக மாறி இருக்கின்றன! இந்த நபிமொழியில் வரக்கூடிய “அனைத்து விஷயங்களிலும்” என்ற சொல் இதற்கு  ஆதாரமாக  இருப்பதோடு அதனை உறுதிப்படுத்துகின்றது.
ஆனால் இரண்டு விஷயங்களை விட்டு தவிர்ந்து கொள்ள வேண்டும்:
(1) கட்டாயமான கடமைகள், தடுக்கப்பட்டவைகள்; உதரணமாக ஒரு மனிதன் லுஹர் தொழுவதற்காக வேண்டி லுஹர் தொழுவதா? இல்லையா? என்பதற்காக இஸ்திகாரா தொழுவது கூடாது! அல்லது ஹராமக்கப்பட்டிருக்கின்ற வட்டியை வாங்குவதற்கு முன்னால் வட்டியை வாங்குவதா? இல்லையா? என்பதற்கு இத்தொழுகை தொழக் கூடாது! ஏனெனில் லுஹர் தொழுகை என்பது ஒரு கடமையான தொழுகை. அதனை ஒரு முஸ்லிம் தொழுதுதான் ஆக வேண்டும். அத்தோடு வட்டி எடுப்பது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட விஷயங்களில் ஒன்று. அதனை ஒருவன் தவிர்ந்துதான் ஆகவேண்டும்.
(2) வழமையான விஷயங்கள், உதாரணமாக ஒருவன் உண்பதற்கும் குடிப்பதற்கும் இஸ்திகாரா  தொழ முற்படுகிறான் உண்பதா? குடிப்பதா? என்று! இதற்கு இஸ்திகாரா தொழவேண்டிய தேவையும், பிரார்திக்க வேண்டிய அவசியமும் கிடையாது. ஏனெனில் ஒருவன்  உண்பதும் குடிப்பதும் இன்றியமையாத தேவைகளாகும்.
அல்லாஹ்வினால் தேர்ந்தெடுத்தவற்றிலே நன்மையுண்டு:
ஒரு முஸ்லிம், ஒரு விஷயத்துக்காக இஸ்திகாரா தொழுவான்; ஆனால் அந்த விஷயத்தையே முக்கியத்துவப்படுத்தி அதிலே உறுதியாக இருப்பான்; அல்லாஹ் அவனுக்கு அதனை விதியாக்கி இருக்கமாட்டான்!  உதாரணமாக, ஒருவன் தனக்கு விரும்பிய பெண்னை திருமணம் முடிப்பதற்காக இஸ்திகாரா தொழலாம். ஆனால் அல்லாஹ்வின் விதியில் அது எழுதப்பட்டிருக்காது.  இவ்வாறான நிலைமையில் அல்லாஹ்வின்பால் அவன் நல்லெண்ணம் வைக்க வேண்டும். அவனது விதியை முழுமையாக பொருந்திக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கபட்டவற்றிலே நன்மையும் வெற்றியும் உண்டு என்று அவன் நம்ப வேண்டும். சில வேளைகளில் அவன் விரும்பிய அப்பெண் அவன் மோசமாகுவதற்கு அல்லது பாவியாகுவதற்கு காரணமாக இருக்கலாம்! ஆனால் அதனை அவன் அறியமாட்டான்.  யாவற்றையும் அறிந்த அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
قال تعالى(وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون)
سورة البقرة :216
அல்லாஹ் கூறுகிறான்:
“நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள்; அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்; நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள்; அது உங்களுக்கு தீங்காகவும் இருக்கலாம்; நீங்கள் அறிய மாட்டீர்கள் அல்லாஹ்வே மிக அறிந்தவன்” (அல்-குர்ஆன் 2:216)
அதிகமான மக்கள் பல விஷயங்களை வெறுத்திருப்பார்கள்; ஆனால் அவைகள் அவனது விதியில்-அல்லாஹ்வினால் நன்மையுள்ளதாக எழுதப்பட்டிருக்கும்!  பிற்காலத்தில் அதில் அவனுக்கு நன்மையாக அமைகின்றது. அதே போன்று எத்தனையோ மனிதர்கள் ஏராளமான விஷயங்களை விரும்பி இருப்பார்கள்.  விரும்பப்பட்ட அவ்விஷயங்கள் அவனை அழிவின்பால் இட்டுச் சென்றிருப்பதைப் பார்க்கலாம். இதனையே அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
قال تعالى (والله يعلم وأنتم لا تعلمون)سورة البقرة :216
அல்லாஹ் கூறுகின்றான்:
“அல்லாஹ் தான் நன்கறிபவன் நீங்கள் அறிய மாட்டீர்கள்”  (அல்-குர்ஆன் 2:216)
சில விஷயங்களை பொருத்தவவையில், அல்லாஹ் ஒரு மனிதனுக்கு நன்மையை நாடி இருப்பான்.  ஆனால் அதில் அவனுக்கு வெற்றி இருக்காது! உதாரணமாக ஒரு மனிதன் ஒரு பெண்னை திருமணம் செய்வதற்காக இஸ்திகாரா தொழுது பிரார்திப்பான்; அத்திருமணம் நடக்கும்;  குறித்த அப்பெண்னை மணப்பான்;  காலப்போக்கில்  அத்திருமணம் சீர்குழைந்துவிடும்; எனவே இச்சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்வை பொருந்திக்கொள்ள வேண்டும். அதுவும் அவனுக்கு நல்லதாகவே இருக்கும் அதனை அவன் அறியமாட்டான்
இஸ்திகாரா தொழுகையினால் ஏற்பட்ட ஒரு உண்மை நிகழ்வொன்றை காண்போம்:
ஹிஜ்ரி 1400 ஆம் ஆண்டு ஒருவர் பிரயாணத்தை மேற்கொள்வதற்காக ரியாத் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றார். அவர் விமான நுழைவு சீட்டையும் (Boarding Pass) பெற்று  விமானத்துக்கு புறப்படும் இடத்தில், அழைக்கும் வரை எதிர்பார்த்து இருந்தார்.    அப்போது தன்னை அறியாமல் தூக்கம் அவரை மிகைத்து விட்டது. திடீரென விழித்தபோது, விமானம் புறப்படக்கூடிய நேரம் நெருங்கிவிட்டது; வாயில்கள் மூடப்பட்டுவிட்டன;  அப்போது அவருக்கு விமானத்தில் ஏறுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை!
விமானத்திற்குள் நுழைவதற்காக தன்னால் முடியுமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். இறுதியில் அனைத்துமே பயனளிக்கவில்லை! பின்னர் தான் கவலையுற்றவராக தடுமாறிக் கொண்டிருந்தார். குறித்த விமானம், ஒரு சில வினாடிகளில் ஏதோ ஒரு கோளாறு இருப்பதாக அடுத்த விமான நிலையத்திற்கு தரையிறக்குமாறு கட்டளையிடப்பட்டது. ஆனால் தரையிறக்கப்படுவதற்கு முன்னரே 300  பிரயாணிகளுடன் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இதனது இரகசியம் என்ன?
அம்மனிதர் தீப்பிடிக்கும் என்று கற்பனைக் கூட செய்திருக்க மாட்டார்! இதுதான் அல்லாஹ்வின் ஏற்பாடு! நிச்சயமாக அம்மனிதருக்கு பிரயாணம் செய்ய கிடைக்கவில்லை; அதன் மூலம் அவருக்கு நலவு இருந்திருக்கின்றது!
எப்பொழுது துஆவுடன் மாத்திரம்  சுருக்கிக்கொள்ள வேணடும்?
சிலருக்கு சில சந்தர்ப்பத்தில் தொழுகையை நிறைவேற்ற முடியாதவர்களாக இருப்பார்கள்! மாதவிடாய், நிபாஸ் நிலைமைகளில் இருக்ககூடிய பெண்களைப் போன்றவர்ககளைக் கூறலாம். இவர்களை பொருத்தவரையில் தொழ முடியுமான நிலை வரும்வரை தொழுகையைப் பிற்படுத்தலாம்.  குறித்த அச்சந்தர்ப்பத்தைப் பிற்படுத்த முடியாவிட்டால், தொழுதுதான் ஆகவேண்டுமானால் துஆவுடன் மாத்திரம் நிறுத்திக் கொள்ளலாம். அதாவது நபிமொழியில் வரக்கூடிய பிரார்தனையை மாத்திரம் கேட்பார். இதற்கு பின்வரக்கூடிய வசனங்கள் ஆதாரமாக அமைகின்றன.
قال تعالى(لا يكلف الله نفسا إلا وسعها….)سورة البقرة286
அல்லாஹ் கூறுகின்றான்:
“அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை”  (அல்-குர்ஆன் 2:286)
قال تعالى (فاتقوا الله ما استطعتم)سورة التغابن:16
அல்லாஹ் கூறுகின்றான்:
“உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்”  (அல்குர்-ஆன் 64:16)
சகோதரா! உனது வியாபாரத்தை துவக்குவதற்கு முன்னால் அல்லது தொழிற்சாலைக்கு வேலையாட்களை சேர்ப்பதற்கு முன்னால்  இஸ்திகாரா தொழுகையை தொழுதுகொள்!
சகோதரா! நீ ஒரு தொழிலுக்காக விண்ணப்பிப்பதற்கு முன்னால் அதில் நன்மையுண்டா? தீமையுண்டா? என்பதனை உன்னால் அறிய முடியாது! அல்லது ஒரு நோயாளி தனது நோயை குணப்படுத்த  வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன்னால், அல்லது ஒரு வீட்டையோ, தொலைதொடர்பு சாதனங்களையோ, ஒரு வாகனத்தையோ  வாங்குவதற்கு முன்னால் இஸ்திகாரா தொழுகையை தொழுது பிரார்தித்துக்கொள்!
சகோதரா! திருமணத்திற்காக தயாராகுவதற்கு முன்னால், திருமண பேச்சுவார்த்தையை துவக்குவதற்கு முன்னால், மணமகன் அல்லது  மணமகளைப் பார்ப்பதற்கு முன்னால் இஸ்திகாரா தொழுகையை தொழுது பிரார்தித்துக்கொள்!
சகோதரா! இஸ்திகாரா தொழுகை வெற்றியின் ஆரம்ப படித்தரமாகும்! அல்லாஹ்வின் நாட்டத்தால் இம்மை மறுமை வெற்றிக்கு காரணமாகவும் அமைகின்றது! அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடந்து அவனுடன் உண்மையான முறையில் நடந்துகொண்டால், அவன் மீதே நம்பிக்கை வைத்தால், வெற்றியின் நுழைவாயில்கள் அனைத்தையுமே அவன் திறந்து கொடுப்பான்.
இது அல்லாஹ்வின் அருள்! அவன் நாடியவருக்கு அருள்பாளிக்கின்றான்! அல்லாஹ் மகத்தான அருளுக்கு உரியவனுமாவான்.

தொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்!

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103)
ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள். (அல்-குர்ஆன் 19:59)
தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) – நல்ல – செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர; அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) – சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது. ” (அல்-குர்ஆன் 19:60)
இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். ” (அல்-குர்ஆன் 107:4-5)
ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் – எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். (அல்-குர்ஆன் 63:9)
குர்ஆன் விரிவுரையாளர்கள் மேற்கண்ட வசனங்களுக்கு விளக்கமளிக்கையில், பின்வருமாறு கூறினார்கள்.
இறைவனை நினைவு கூர்தல் என்று கூறப்பட்ட மேற்கூறிய வசனத்திற்கு ஐந்து நேரத் தொழுகையைக் குறிக்கிறது. யாராவது ஒருவர் கொடுக்கல் வாங்கல், தன்னுடைய குடும்பத்தினருக்காக சம்பாதிப்பது அல்லது தன்னுடைய குழந்தைகளுடன் இருப்பது போன்ற காரியங்களுக்காக தொழுகையை விட்டுவிடுவாரானால் அவர் நஷ்டத்திற்கு உள்ளானவராவார்.
மறுமையில் முதல் விசாரனை தொழுகையைப் பற்றியதாகும்: -
அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள்: -
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: மறுமையில் ஒரு மனிதனின் அமல்களைப் பற்றி விசாரிக்கப் படும்போது தொழுகையைப் பற்றியே முதன் முதலாக விசாரிக்கப்படும். அது சீராக அமைந்து விடுமேயானால் ஏனைய அனைத்து வணக்க வழிபாடுகளும் சீராகவே அமையும். அது சீராகவில்லையென்றால் ஏனைய அனைத்தும் சீரற்றதாகவே இருக்கும். (ஆதாரம்: ஸுனன் அபூதாவுத்)
நரக வாசிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அல்லாஹ் கூறுகிறான்: -
‘உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?’ (என்று கேட்பார்கள்.) அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ‘தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை. ‘அன்றியும், ஏழைகளுக்கு நாங்கள் உணவும் அளிக்கவில்லை. ‘(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம். ‘இந்த நியாயத் தீர்ப்பு நாளை நாங்கள் பொய்யாக்கிக் கொண்டும் இருந்தோம். ‘உறுதியான (மரணம்) எங்களிடம் வரும்வரையில் (இவ்வாறாக இருந்தோம்’ எனக் கூறுவர்). (அல்-குர்ஆன் 74:42-47)
தொழுகையை விடுவது இறை நிராகரிப்பு: -
அல்லாஹ் கூறுகிறான்: -
நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். (அல்குர்ஆன் 30:31)
நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: -
ஒரு முஸ்லிமுக்கும் இணைவைத்தலுக்கும், இறை நிராகரிப்புக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவது தான். (ஆதாரம்: முஸ்லிம்)
முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத் , திர்மிதி)
தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. (ஆதாரம்: திர்மிதி)
“நிராகரிப்புக்கும் இஸ்லாத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம் தொழுகையே. எவன் அதனை விடுகின்றானோ நிராகரித்தவனாகின்றான்” (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)
அபூ தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ”எவனிடம் தொழுகை இல்லையோ அவனிடம் ஈமான் இல்லை”
தொழுகையைத்தவிர மார்க்க விஷயத்தில் எதை விடுவதினாலும் ஒருவன் காஃபிராகிவிடுவான் என்று நபித்தோழர்கள் கருதவில்லை. ஆதாரம்: திர்மிதி
தொழாதவர்களின் நோன்பு, தர்மம் போன்ற நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது: -
“அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்; அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள்; மேலும் மிகச் சடைந்தவர்களாகவேயன்றி தொழுகைக்கு அவர்கள் வருவதில்லை. இன்னும் அவர்கள் வெறுப்புடனேயன்றி தானங்கள் செய்வதில்லை” (அல் குர்ஆன் 9:54)
யார் ஒருவர் வேண்டுமென்றே தொழுகையை விட்டுவிடுகிறாரோ அவர் அல்லாஹ்விடத்திலே எதையும் அடைய இயலாது (இப்னுமாஜா)
தொழுகையை நிலைநாட்டுபவர்கள் மட்டுமே மார்க்கத்தில் சகோதரர்கள்: -
‘அவர்கள் தவ்பாச் செய்து (திருந்தி), தொழுகையை நிலைநாட்டி, ஜக்காத்தும் கொடுத்தால் அவர்கள், மார்க்கத்தில் உங்கள் சகோதரர்களே’ (அல்-குர்ஆன் 9:11)
‘மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள். இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். (ஆதாரம்: புகாரி)
கருணையாளனாகிய அல்லாஹ் நம் குற்றங்களை மன்னித்து முஸ்லிமான நம் அனைவைரயும் தொழுகையை முறைப்படி பேணி நடப்பவர்களாக ஆக்கியருள்வானாகவும்...Aameen.....