வெள்ளி, 11 மார்ச், 2011

How to make a kafan for women!!!

You require
1.10yards of white(36"wide)cotton material
   (10 யார் 36" அகலமான வெள்ளைத் துணி)

pieces are prepared for women:-
1,2:-measure the length of the deceased,(from head to toe) and cut 3 pieces,one
foot longer than this length.split one of them lengthwise and stitch each of these
to the other pieces,lengthwise.

மரணித்தவரின் தலை முதல் கால் வரையான உயரத்தை விட ஒரு அடி
உயரமான 3 நீளத்துணிகளை வெட்டி எடுக்கவும்.அதில் ஒன்றை
நீளவாட்டுக்கு இரண்டாக வெட்டி,வெட்டப்பட்ட துணிகள் ஒவ்வொன்றையும்
மற்ற ஒவ்வொரு துணிகளுடனும் நீளவாட்டுக்கு இணைத்துத் தைக்கவும்.
ஜனாஸாக் குளிப்பாட்டல்.
ஒருவர் மரணித்தால்:-
  • "பிஸ்மில்லாஹி வ அலாமில்லதி ரஸுலுல்லாஹி "என்று கூறிக்

       கண்களைக் கசக்கி முடவும்.

  • நாடியை உயர்த்திக் கட்டவும்.கால் பெருவிரல்களைச் சேர்த்துக் கட்டவும்.
  • கை கால்களை நீட்டி மடக்கி நேராக்கவும்.
  • ஆடை,ஆபரணங்கள்,பொய்பற்கள் போன்றவற்றை நீக்கவும்.
  • முழு உடலையும் ஒரு புடவையால் மூடி வைக்கவும்.
  • வயிற்றின் மீது சிறு பாரமான பொருளொன்றை வைக்கவும்.
  • தலையை ஒரு சிறு தலையணை மீது உயர்த்தி வைக்கவும்.
  • உற்றார் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் மரணச் செய்தியை அறிவிக்கவும்.
  • கடனிருப்பின் கடன் தீர்க்க வழி செய்யவும்.
  • ஜனாஸா எடுக்கப்படும் நேரத்தைத் தீர்மானிக்கவும்.
ஜனாஸா குளிப்பாட்டக் கபனைத் தயார் செய்யவும்.

குளிப்பாட்டல்:

  • குளிப்பாட்டுபவர் உறவினராய் இருப்பது நல்லது.குளிப்பாட்டும் முறை

       தெரிந்தவராக இருக்க வேண்டும்.ஸாலிஹானவராய் இருக்க வேண்டும்.
       துடக்குடையவராகஇருந்தாலும் பாதகமில்லை.குளித்து வுளுச் செய்து சுத்தமானவராய் இருப்பது மேல்.
  • சற்று உயரமான இடத்தில் வைத்துக் குளிப்பாட்டுதல் நல்லது.
  • அவ்ரா எந்நேரமும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
  • குளிப்பாட்டுபவர் மையத்தின் அவ்ராவை தொடலாகாது.
  • ஆகவே,கையை ஒரு துணியைக் கொண்டு சுற்றிக் கொண்டு குளிப்பாட்ட வேண்டும்.பின்னல்களை அவிழ்த்து விடவும்.நீர் உடலின் மீது படுவதைத்  தடுக்கக்கூடிய வஸ்துக்கள் இருந்தால் அவற்றை நீக்கவும்.
  • நகங்களுக்கடியிலுள்ள அசுத்தங்களை நீக்கவும்.நகத்தையோ, தலை மயிரையோ வெட்டலாகாது.
  •  மையத்துக்கு வுளுச் செய்து விடவும்.வலதை முற்படுத்தவும்.
  • சோப்,கிருமி நாசினிகள்,வாசனத்திரவியங்கள் பாவிக்கலாம்.
  • ஒற்றைப் படையில் குளிப்பாட்டவும்.
  • தலையையும் உடலையையும் ஒற்றித் துடைக்கவும்.
  • தலை மயிரை மூன்று பின்னல்களாகப் பின்னி பின்னால் விடவும்.
  • பஞ்சில் சந்தனமும்,கற்பூரமும் ஒற்றி மடிப்புக்கள் ஈரம் தங்கக்கூடிய இடங்கள்,துவாரங்கள் என்பவற்றில் வைக்கவும்.கபனால் உடுப்பாட்டவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக